Monday, August 25, 2014

உனை மறவேன்!

சுப்பு தாத்தா அற்புதமாகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



எத்தனை துன்பங்கள் வந்தாலும்
என்றும் உனை மறவேன் - என் தாயே!
(எத்தனை)

சத்தியமாய் நெஞ்சில் ஒளிர்பவளே!
பத்திரமாய் எம்மைக் காப்பவளே!
(எத்தனை)

ஏங்கும் மனதிற்கு ஆன்ம பலம் தருவாய்!
தேங்கும் துன்பங்களை துரத்தி அடித்திடுவாய்!
தாங்கும் என் தாயே....
தாங்குமென் தாயே தரணியின் நாயகியே!
நீங்காது என்னெஞ்சில் நிலை பெற்றாய் நீயே!
(எத்தனை)


--கவிநயா

2 comments:

  1. அங்கயற் கண்களால் அருள் மழை பொழிவாய்!
    பங்கயப்பாதங்கள் சென்னியிலே பதிப்பாய் !
    தாங்கும் என் தாயே....
    தாங்குமென் தாயே தரணியின் நாயகியே!
    நீங்காது என்னெஞ்சில் நிலை பெற்றாய் நீயே!
    (எத்தனை)

    ReplyDelete