Monday, January 3, 2011

கடைவிழியாலே கடைத்தேற்று!


கடைவிழி யாலே கடைத்தேற்று - உன்றன்
எழில்விழி யாலே வழிகாட்டு
குழல்மொழி யாளே மலர்ப்பாதம்
குழைந்து பணிகின்றோம் காப்பாற்று

அண்ட மெல்லாம் பூத்த அருள்சகியே - விடங்
கொண் டவனைக் கொண்ட பசுங்கிளியே
பிறை தனை முடியினில் தரித்தவளே - பிரமன்
சிரம் பறித் தவனை வரித்தவளே

மின்ன லென வினை ஒழியும் உன்னாலே - அதைக்
கண்ட தொண்டர் உளம் மகிழும் தன்னாலே
பின்னும் ஒரு பிறவி உண்டோ உனைத் தொழுதால் - எந்தன்
கண்ணின் மணி அன்னை உந்தன் பதம் பணிந்தால்

--கவிநயா

10 comments:

  1. வழக்கம் போல நன்றாக இருக்கிறது.

    ReplyDelete
  2. //வழக்கம் போல நன்றாக இருக்கிறது.//

    :) வழக்கம் போல நன்றி கோபி :)

    கவிதை முயற்சி எப்படி போயிட்டிருக்கு? :)

    ReplyDelete
  3. கவி...

    எப்படி இருக்கீங்க?

    ரொம்ப நாள் கழிச்சு இங்க வந்திருக்கேன்...

    வந்தால், வழக்கம் போல் கடைவிழியால் கடைத்தேற்று என்று நீங்கள் எழுதிய அருமையான கவிதை வரவேற்றது... அதுவும் முடிவில் நீங்கள் எழுதியிருந்த இந்த வரிகள், ஆஹா அற்புதம் என்று சொல்ல வைத்தது...

    //மின்ன லென வினை ஒழியும் உன்னாலே - அதைக்
    கண்ட தொண்டர் உளம் மகிழும் தன்னாலே
    பின்னும் ஒரு பிறவி உண்டோ உனைத் தொழுதால் - எந்தன்
    கண்ணின் மணி அன்னை உந்தன் பதம் பணிந்தால்//

    அவளின் பாதம் பணிந்து என்னையும் கடைத்தேற்றுமாறு கேட்கிறேன்...

    ReplyDelete
  4. வாங்க ஆர்.கோபி. ஒரு நொடி குழம்பிட்டேன், இப்பதானே கோபியோட பின்னூட்டம் பார்த்தோம், அப்படின்னு :)

    ரொம்ப நாள் கழிச்சு உங்களைப் பார்த்ததில், கவிதை உங்களுக்கு பிடித்திருப்பதில், மிக்க மகிழ்ச்சி :)

    ReplyDelete
  5. கடைவிழி யாலே கடைத்தேற்று - உன்றன்
    எழில்விழி யாலே வழிகாட்டு
    குழல்மொழி யாளே மலர்ப்பாதம்
    குழைந்து பணிகின்றோம் காப்பாற்று:)

    Superb:)
    ஜெய ஜெய பார்வதி பதயே நமஹ!
    ஹர ஹர மஹா தேவா!

    ReplyDelete
  6. வாங்க ராஜேஷ். நன்றி :)

    ReplyDelete
  7. கணினி நுணுக்கங்கள் புரிபடாததால் [முதுமை -61 ] கொமென்ட்ஸ் எழுதியபின் அழித்துவிட்டேன் .இப்போ

    வெற்றி.கவிநயா,உன் அம்மன் பாட்டெல்லாமே சூ......ப்பர்.கடைசீபாட்டு படித்ததும் கடைதேறிவிடுவோம்

    என்று நம்பிக்கை வந்துவிட்டது அடுத்த பாட்டுக்காக காத்திருக்கேன் .lalitha mittal

    ReplyDelete
  8. உங்களை லலிதாம்மான்னு கூப்பிடலாமா? உங்க பின்னூட்டம் பார்த்து ரொம்ப சந்தோஷமாயிடுச்சு :) மிக்க நன்றி அம்மா.

    ReplyDelete
  9. சில சமயம் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப சுலபமான காரியம் போல தோன்றுகிறது. :-)

    ReplyDelete
  10. //சில சமயம் கவிதை எழுதுவது ரொம்ப ரொம்ப சுலபமான காரியம் போல தோன்றுகிறது. :-)//

    அப்படித்தான் எனக்கும் சில நேரம் தோணும் :) மற்ற நேரம் - சே, ஒண்ணுமே தோணலையேன்னும் தோணும்...

    ReplyDelete