Tuesday, October 4, 2011

அம்பா நவமணிமாலை

அம்பா நவமணிமாலை

 1) வாணீம்  ஜிதசுகவாணீமளிகுல
     வேணீம் பவாம்புதித்ரோணீம் /
    வீணாசுகசிசு பாணீ ம்
   நதகீர்வாணீம் நமாமிசர்வாணீம் //

மறையவளே!கிளியை வெல்லும் மொழியாளே!வண்டன்னக் 
கருங்குழலாளே!பிறவிக்கடல்கடக்கப் படகாவாளே!
வீணைக்கரத்தாளே!கிளியமருந்தோளாளே!வாணியும்   
பணிந்திடும் பூங்கழலாளே! பவானியே!சரணமம்மா!

2) குவலயதளநீலாங்கீம்
    குவலயரக்ஷைகதீக்ஷிதாபாங்கீம் /
    லோசனவிஜிதகுரங்கீம்
    மாதங்கீம் நௌமி சங்கரார்த்தாங்கீம் //

நீலக்கமல மேனியளே!தரணி காக்க 
உறுதிபூண்டொளிரும்   ஓரக்கண்ணாளே!
மானைப்பழிக்கும்  எழில்விழியாளே!
மாதங்கி! சரணம்,சங்கரனின்  பங்கிணியே!

3)கமலாகமலஜகாந்தாகரசாரச
தத்தகாந்தகரகமலாம் /
கரயுகலவித்ருதகமலாம் விமலாம்
கமலாங்கசூட சகலகலாம் //

கமலையும் கலைமகளும் கமலக்கரமேந்தும்  
கமலமன்ன   மென்கரங்களிரண்டிலும்  
கமலமலர்கள்  தாங்குந் தூயவளே!
சசிதரனின்  சகலகலைகளின் வடிவே !

4)சுந்தரஹிமகரவதனாம் குந்தஸுரதனாம்
  முகுந்தநிதிஸதனாம் /
கருணோஜ்ஜீவிதமதனாம் ஸுரகுசலாயா
 சுரேஷு க்ருதகதனாம் //

எழில்மதிமுகத்தாளே!முல்லைப்பூப்பல்லழகி!
அரும்பொருளின் உறைவிடமே!
கருணையால் காமனை உயிர்ப்பித்த உத்தமி!
சுரரைக்காக்க அசுரரை அழித்தவளே!

5) துங்கஸ்தனஜிதகும்பாம்  க்ருதபரிரம்பாம்
    சிவேன குஹடிம்பாம் /
    தாரிதசும்பநிசும்பாம் நர்த்திதரம்பாம்
    புரோ  விகததம்பாம் //

தாய்மைபொங்கும் மார்பினளே!அரனணைக்குமேனியளே!
சேயாய் சிவகுகனை உடையவளே!
சும்பநிசும்பரை நசித்தவளே!ரம்பைநடனம் ரசிப்பவளே!
தன்னலமறியா அன்பில் தாயாய்த்திகழ்பவளே!

6)அருணாதரஜிதபிம்பாம் ஜகதம்பாம்
   கமனவிஜிதகாதம்பாம் /
  பாலிதசுஜனகதம்பாம் ப்ருதுல
  நிதம்பாம் பஜே சஹேரம்பாம் //

கொவ்வைச்செவ்விதழாளே!பாராளும் பேரருளே!
அன்னத்தைவெல்லும் மென்னடையாளே!
தன்னடியார் நன்னலம் காப்பவளே!பூரித்த
பின்னழகி!ஐங்கரனோடருள்பவளே!சரணம்!

7)சரணாகதஜனபரணாம்  கருணா
  வருணாலயாம் நவாவரணாம் /
  மணிமயதிவ்யாபரணாம் சரணாம்
 போஜாதசேவகோத்தரணாம் //

"கதி நீயே!"என்போரைக்காக்குங்  கருணைக்கடலே!
மதிலொன்பது சூழ அமர்ந்து உலகாளும்  மாதரசி!
மணிநிறைப்புனிதஅணி  பூண்டவளே! நின்கமலப்
பதம்பணியுமடியாரை உய்விக்கும் உமையாளே!

8)நதஜனரக்ஷாதீக்ஷாம் தக்ஷாம்
பிரத்யக்ஷதைவதாத்யக்ஷாம் /
வாஹீக்ருதஹர்யக்ஷாம்
க்ஷபிதவிபக்ஷாம் சுரேஷு க்ருதரக்ஷாம்//

தாள்பணிவோர் நலங்காக்கும்   நல்லவளே!வல்லவளே!
காட்சிதரும் தெய்வங்களின் தலைவியாய்த் திகழ்பவளே!
வாகனமாம் சிங்கமேறி வளையவரும் சிங்காரி!
தானவரை வதம்செய்து தேவர்குலங்காத்தவளே!

9)தன்யாம் சுரவரமான்யாம் ஹிமகிரி
கன்யாம் த்ரிலோகமூர்த்தன்யாம் /
விஹ்ருதசுரத்ருமவன்யாம் வேத்மி
வினா த்வாம் ந தேவதாஸ்வன்யாம் //

பொருள்வளமருள்பவளே!சுரருந்தொழுஞ் சிவையே!
கிரியரசன் பொன்மகளே!மூவுலக நாயகியே!
தெய்வீகத்தருக்கள் நிறை  பூம்பொழிலில் நடைபழகும்
தூயவளே!உனையன்றி வேறுதெய்வம் நானறியேன்!

                                பலஸ்ருதி

ஏதாம் நவமணிமாலாம் படந்தி
பக்த்யேஹ யே பராசக்த்யா :/
தேஷாம் வதனே சதனே ந்ருத்யதி
வாணி ரமா ச பரமமுதா //

நவமணிமாலையிதை ஓதி அம்பிகையைப்பணிவோர்
நாவினிலே நான்முகனின் நாயகியாம் நாமகளும்,
இல்லத்திலே செல்வத்தினை அள்ளித்தரும் திருமகளும்
உள்ளமெல்லாம் மகிழ்ந்து   புரிந்திடுவர் களிநடனம்!
                                -------------------------------------------------

பாதய வா பாதாளே ஸ்தாபய வா
சகலபுவனஸாம்ராஜ்யே  /
மாதஸ்தவ பதயுகளம் நாஹம்
முஞ்சாமி நைவ முஞ்சாமி //

அன்னையே!நீ என்னைப் பாதாளத்தில் தள்ளிடினும்,
மன்னவனாய் அகிலத்தையே ஆளும்பதவி தந்திடினும்
என்னிருகை பற்றிவிட்ட உன்னிரு பூம்பாதங்களைப்
பொன்னெனவே போற்றிடுவேன்;ஒருபோதும் விடமாட்டேன்!
 http://www.esnips.com/doc/10cc5139-3aae-4dfb-afe1-43c5d2a18016/navamanimalai-kala

2 comments:

  1. இனிமையான பாடல். நன்றி லலிதாம்மா.

    ReplyDelete
  2. //அன்னையே!நீ என்னைப் பாதாளத்தில் தள்ளிடினும்,
    மன்னவனாய் அகிலத்தையே ஆளும்பதவி தந்திடினும்
    என்னிருகை பற்றிவிட்ட உன்னிரு பூம்பாதங்களைப்
    பொன்னெனவே போற்றிடுவேன்;ஒருபோதும் விடமாட்டேன்!//

    விடேன், விடேன், ஒரு நொடியும் விட்டிலேன்! அதற்கும் நீயே அருளல் வேண்டும் அம்மா.

    அருமையான பாடலுக்கு நன்றி லலிதாம்மா.

    ReplyDelete