Monday, October 31, 2011

மதுரை நகர் தேவியே!

இன்றைக்கு திவாகர்ஜியின் நேயர் விருப்பம் :)


மதுரைநகர் தேவியே மண்ணாளும் ராணியே
மனதினிலும் குடிபுகுந்து எமைஆள் மீனாக்ஷியே

(மதுரை)

மோகனமாய்ச் சிரிப்பவளே மோகமெல்லாம் எரிப்பவளே
சோகமெல்லாம் தீர்ப்பவளே சுவர்க்கமென இனிப்பவளே
திக்கெட்டும் ஜெயித்தவளே திகம்பரனை மணந்தவளே
சொற்கட்டின் உட்புகுந்து நற்பொருளாய் திகழ்பவளே

(மதுரை)

கிளிப்பிள்ளை போலநானும் உன்பெயரைச் சொல்லிடணும்
சிறுபிள்ளை போலஉன்னைச் சுற்றிச்சுற்றி வந்திடணும்
விழிக்குள்ளே உன்னைவைத்து வாழ்த்திதினம் போற்றிடணும்
வழித்தொல்லை வாராமல்நீ வாஞ்சையுடன் காத்திடணும்

(மதுரை)


--கவிநயா

8 comments:

sury said...

// சொற்கட்டின் உட்புகுந்து நற்பொருளாய் திகழ்பவளே//

அற்புதமான வர்ணனை.

சுப்பு ரத்தினம்.
http://vazhvuneri.blogspot.com
http://kandhanaithuthi.blogspot.com

DHIVAKAR said...

எனையாளும் மீனாட்சியுன்
மனமகிழப் பாடுவோமே
செந்தமிழாம் கவிநயத்தை
செவியாரக் கேட்போமே

சொல்லில்லாமல் பாடலில்லை
சொல்லாக நீயிருந்தாய்
நீயிருந்து நின்றதனால்
தேனிருந்து தித்திக்குதே

சொக்கவைக்கும் பாட்டு
சொக்கனுக்கு கேட்கட்டும்
சொக்கிசொக்கிக் கேட்டுவிட்டு
சொக்கிப்போய் நிற்கட்டும்

கவிநயா said...

வாங்க தாத்தா. மிக்க நன்றி!

கவிநயா said...

//சொக்கவைக்கும் பாட்டு
சொக்கனுக்கு கேட்கட்டும்
சொக்கிசொக்கிக் கேட்டுவிட்டு
சொக்கிப்போய் நிற்கட்டும்//

நல்லது திவாகர்ஜி :) அப்படியே ஆகட்டும்.

கவியோடு ரசித்தமைக்கு மிக்க நன்றி!

Kailashi said...

//கிளிப்பிள்ளை போலநானும் உன்பெயரைச் சொல்லிடணும்//

Om sakthi OM sakthi , OM sakthi

கவிநயா said...

வருகைக்கு மிக்க நன்றி, கைலாஷி!

Lalitha Mittal said...

காளியாய்க்கொடியோரின் விதி முடிக்கும் வல்லவளே!

நீலியாய் அடியார்க்கு நீதி செய்யும் நல்லவளே!

தோளிலே தத்தைக்கு இடமளித்த இனியவளே;

தாளிலே எனக்குமொரு இடமளிப்பாய் கனிவுடனே!

Lalitha Mittal said...

காளியாய்க்கொடியோரின் விதி முடிக்கும் வல்லவளே!

நீலியாய் அடியார்க்கு நீதி செய்யும் நல்லவளே!

தோளிலே தத்தைக்கு இடமளித்த இனியவளே;

தாளிலே எனக்குமொரு இடமளிப்பாய் கனிவுடனே!