Friday, October 10, 2008

"தேவி திருக்கதை" -- 10

"தேவி திருக்கதை" -- 10
"கதை சொல்லும் கதை"
முடிந்தால் முந்தைய இரு பதிவுகளையும் படித்துவிட்டு இங்கு வந்து படியுங்கள்!"

இதென்ன புதுக்கதை?

ஏதோ ஒரு கதையைச் சொன்னீங்க .. சரி!
அதுக்குள்ளே சில செய்திகள் இருக்குன்னு சொன்னீங்க.. அதுவும் சரி!
இப்ப தோத்திர வரிகளே மந்திரங்கள்னு சொல்றீங்களே!
அது எப்படீன்னு கேக்கறீங்கதானே!


இது நான் சொல்வதல்ல!
இதை நன்கு கற்றுணர்ந்து, பயின்று, அனுபவித்த ஆன்றோர்கள் சொன்னதைத்தான் இங்கே தொகுத்தளிக்கிறேன் என முதலிலேயே சொல்லியிருக்கிறேன்.
அதைத்தான் இங்கு உங்களுக்கும் சொல்கிறேன்.

தேவி மஹாத்மியம் என்னும்புனித நூலின் ஒவ்வொரு ஸ்லோகமுமே மந்திர அர்த்தங்கள் நிறைந்த ஒன்று.

மாதிரிக்கு ஒரே ஒரு ஸ்லோகத்தை மட்டும் காட்டுகிறேன்.
ஆனால், இது உங்களில் யாரையாவது உலுக்கினால், நீங்கள் செய்ய வேண்டியது ஒரு தேர்ந்த சக்தி உபாசகரை நாடி, அக்கறையுடனும், ஆர்வத்துடனும் கேட்டுத் தெரிந்து கொள்ளணும்.


வெறும் புத்தக அறிவுக்காக மட்டும் இதைத் தேடவோ, நாடவோ வேண்டாம் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொண்டு தொடர்கிறேன்.

தேவி மஹாத்மியத்தின் முதல் ஸ்லோகம் இப்படி வருகிறது.

Markandeya Uvacha:
Savarni Surya thanayo yo Manu Kadyatheshtama,
Nisamaya Thad uthpathim vistharath gadatho mama., 1


Makandeya told: - Please hear from me about the origin of Savarni who is the son of Sun god and the eighth Manu in detail. (There were fourteen Manus who ruled the world. The seven before Savarni were Swayambhuva, Swarochisha, Uthama, Thapasa, Raivatha, Chakshusha and Vaiwaswatha. Markandeya was the son of Sage Mrukandu and was telling this story to another sage called Bagoori. Some versions have two additional slokas regarding the announcement of Sage Sootha that Jaimini the disciple of Vyasa approached Sage Markandeya and requested him to tell the story of Devi Mahatmya)

மார்க்கண்டேய உவாச:

ஸாவர்ணீர் ஸூர்யதநயோ யோ மனு: கத்யதே அஷ்டம:
நிசாமய ததுத்பத்திம் விஸ்தராத் கததோ மம


இதன் நேரடிப் பொருள் பின்வருமாறு:


"மார்க்கண்டேயர் சொன்னார்:
சூரியக் கடவுளின் புத்திரனும், எட்டாவது மனுவுமாகிய ஸாவர்ணி என்கிறவரின் வரலாறை நான் விவரமாகச் சொல்லுவதைக் கேள்."


இப்போது இதன் மந்திர விளக்கத்தைப் பார்ப்போம்!

சூரியன் என்பது ஒரு நெருப்புக் கோளம்.
'ஸூர்ய தனயன்' என்றால் சூரியனின் மகன் அல்லது சூரியனிலிருந்து பிறந்தது எனப் பொருள்.

சூரியனில் இருந்து என்ன பிறக்கிறது?
'ர' என்னும் விதை, பீஜம் அக்னியில் இருந்து பிறக்கிறது.

தந்திர சாஸ்த்திரங்களின் கருத்துப்படி, 'ராம்' என்ற சொல் அக்னியின் பீஜ மந்திரம்.

'ஸா வர்ணி' என்பதில், 'வர்ணி' என்றால் ஒரு கொக்கி.
இப்போது 'ராம்' எனும் பீஜமந்திரத்தில் ஒரு கொக்கி சேர்ப்போம்.
'ராம்' இப்போது 'ரீம்' ஆகிறது.

'யோ மனு: கத்யதே அஷ்டம:' = எட்டாவது எழுத்து.
எதனுடைய எட்டாவது எழுத்து?
'மனு' என்பது ஒரு வடமொழிச் சொல் [ஸம்ஸ்கிருதச் சொல்]
ஸம்ஸ்கிருதத்தில் எட்டு எழுத்துகள் எவை?
'ய, ர, ல, வ, ஸ்ய, ஷ, ஸ, ஹ'
இதில் எட்டாவது எழுத்து?
'ஹ'

இப்போது இந்த வரி இதுவரை சொன்னது என்ன?
'ஹ' ''ராம்' என்னும் இரு எழுத்துகளுடன் தலா ஒரு கொக்கி போட்டுக்கொள் என்!
'ஹ', ''ராம்''+ கொக்கி= 'ஹ்ரீம்' என ஆகிறது!

'நிசாமய ததுத்பத்திம்'= இதன் பெருமையைக் கேள்!

'விஸ்தராத் கததோ மம' = விவரமாக நான் உரைப்பதை

'ஸாவர்ணீர் ஸூர்யதநயோ யோ மனு: கத்யதே அஷ்டம: நிசாமய ததுத்பத்திம்' = 'ஹ்ரீம்' என்னும் சொல்லின் பெருமையை நான் விவரமாக இப்போது சொல்வதைக் கேள்!

'ஹ்ரீம்' என்பது தேவியின் பீஜம்.

மேலெழுந்தவாரியாக வேறு பொருள் சொன்னாலும், இந்த ஸ்லோகம் சொல்லும் மந்திரப் பொருள் இதுதான்!

இது போலவே அனைத்து மந்திரங்களும் ஒவ்வொரு மறைபொருளைச் சொல்கிறது என கற்றுணர்ந்த ஆன்றோர் சொல்லுவர்.

ஒவ்வொரு செயலுக்கும் தேவையான மந்திரங்களைக் குறிப்பாகத் தேர்ந்தெடுத்து பயன் பெற்றவர் அநேகம்.

எந்தவொரு மனவேதனையின் போதும், அல்லது நாட்டு நடப்புகள் மனம் வருத்தச் செய்யும் போதும் இதனைப் பாராயணம் செய்வது பலனளிக்கும் என்பது அறிந்தவர் சொல்லும் உண்மை!

இந்த உண்மைகளை உள்வாங்கி உலகம் உய்ய நாமும் உய்ய வேண்டும் என இடைவிடாது இந்த புண்ணிய நூலைப் பாராயணம் செய்து அனைத்துயிரும் உய்ய அன்னையை வேண்டி, இந்த விளக்கத்தை இத்துடன் நிறைவு செய்கிறேன்.

இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அது முழுக்க முழுக்க என்னுடைய புரிதலின் தவறே எனச் சொல்லி மன்னிப்பும் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் தேவி நலம் சூழ்க எனச் சொல்லி நிறைவு செய்கிறேன்.


"ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்!

"ஜெய ஜெய தேவி ஜெய ஜெய தேவி துர்கா தேவி சரணம்!

No comments:

Post a Comment