Thursday, August 11, 2011

ஆ.வெ.4: தாமரைப் பூவில் அமர்ந்தவளே!

அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரதத் திருநாள் வாழ்த்துகள்!



பி.சுசீலாம்மா பாடிய பிரபலமான இந்தப் பாடல், உங்களுக்காக...

தாமரைப் பூவில் அமர்ந்தவளே
செந்தூரத் திலகம் அணிந்தவளே
(செந் தாமரைப் பூவில்)

சிந்தையில் நின்றாடும் நாரணன் ச்நெஞ்சினில்
நிறைந்தவளே கருணையில் சிறந்தவளே
(செந் தாமரைப் பூவில்)

சுந்தரி பார்வதி பாமகளும்
சொந்தமுடன் நினைக்கும் பூமகளே
உன்பதம் எந்நாளும் தஞ்சம் திருமகளே
அன்பர்களைக் காத்திடும் அலைமகளே
(செந் தாமரைப் பூவில்)

அலைகடலில் உதித்த ஆதிலக்ஷ்மி தாயே
அமரர்கள் துதி பாடும் அமுதமும் நீயே
செல்வங்கள் பெருகும் உந்தன் திருவருள் துணையாலே
உலகமேல்லாம் உயரும் உன்னருள் மனத்தாலே
(தாமரைப் பூவில்)


**

3 comments:

  1. தாமரைப்பூவில் தாமரைப்பாத தரிசனம்!படம் ரொம்ப அழகு!பாட்டோ அதையும் மிஞ்சிடுத்து!!

    i'd done 'annapoornaashtakam' in thamizh n mailed it to kumaran as i cudn't get yr adrs;pl le'me know
    u got it?

    ReplyDelete
  2. செந்...தாமரைப் பூவில்-ன்னு சுசீலாம்மா இழுக்கும் போதே...மனசு இழுத்துக்கிட்டு போவும்!
    வரலட்சுமி விரத வாழ்த்துக்கள்!:)

    ReplyDelete
  3. நன்றி லலிதாம்மா, கண்ணா.

    ReplyDelete