Thursday, July 5, 2012

மாதரசி!ஆதரி!



மாதரசி!ஆதரி!
(கலாவின் குரலில்)

நெல்லுக்குப் பாய்ச்சிய நீர்
புல்லுக்கும் பொசிவதுபோல்,
நல்லோர் பொருட்டு உந்தன்
அல்லிவிழி பெருக்கும் அருள்,
புல்லன் எனக்கும் பொசிய
கல்யாணி !மனங்கசிவாய்!


சவலைச்சேய் அருட்பாலின்றி
துவள்கையில் நீ துயில்வாயோ?
கவலை இன்றி கண்கள் மூடி
தவத்தில் ஆழ முயல்வாயோ?
அவலக்குரல் கேட்டபின்னும்
மவுன ராகம் பயில்வாயோ?
கல்யாணி !மனங்கசிவாய்!


பொன்மாளிகை ஆனாலும்,
மண் குடிசை ஆனாலும்,
ஆதவன் தன் கதிர்க்கரத்தால்
பேதமின்றி அணைப்பதுபோல்,
பேதையே நான் ஆனாலும்
மாதரசி !ஆதரி நீ !

3 comments:

  1. வாவ், அம்மா! ஒவ்வொரு வரியும் அத்தனை அழகு!

    ReplyDelete
  2. kala,
    thanks fr singing in a sweet raagam

    ReplyDelete