
பாடிப் பாடித் துதிச்சிருக்கேன்
பாசத் தோட காத்திருக்கேன்
பாவி எனக் கருள் புரிய
பைங்கிளிக்கு மனசு வல்ல
தேடித் தேடித் தவிச்சிருக்கேன்
தேவி ஒன்னத் துதிச்சிருக்கேன்
ஓடி வந்து அருள் புரிய
ஒனக்கு இன்னும் மனசு வல்ல
கருண நெறஞ்ச மனம்
கல்லாகிப் போனதென்ன?
வருந்தி அழைச்ச பின்னும்
வாராம இருக்கதென்ன?
நம்பித்தான் காத்திருக்கேன்
நாயகியே வர வேணும்
வம்பேதும் பண்ணாம
வண்ண மயில் வர வேணும்
அன்பு மீறக் கூப்பிடுறேன்
ஆசையாக வர வேணும்
அம்மான்னு கூப்பிடுறேன்
அவசியம் நீ வர வேணும்
--கவிநயா