கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!
ஆடி வருகிறாள் அன்னை
ஆடி வருகிறாள்
(ஆடி)
தில்லையிலே நாதனுடன்
ஆடி வருகிறாள்
நாடி வரும் அடியவரைத்
தேடி வருகிறாள்
(ஆடி)
செம்பாதச் சிலம்பொலிக்க
மென்கரத்தில் வளையொலிக்க
முத்து நகைச் சிரிப்பொலிக்க
ஆடி வருகிறாள், அவள்
பக்தர் மனம் கொள்ளை கொள்ளத்
தேடி வருகிறாள்
(ஆடி)
நாயகியாய் நான்முகியாய்
சங்கரியாய் சாம்பவியாய்
மாலினியாய் சூலினியாய்
ஆடி வருகிறாள், நல்ல
பக்தர் தம்மை ஆண்டு கொள்ளத்
தேவி வருகிறாள்
(ஆடி)
--கவிநயா