![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgtn_jChk8DYza4Td5y7RkBbdYxvYE_5tgYMWVV8Wgznue2oJx-cclV4RDKuCYoIpxB2xqD7-Ydpe76S2cuTIlu__DvkdIQqnSSgPYXXkO-ZDGrL841y8HVV8ThibTRofTQlHOReYjwLg/s400/kamakshi.jpg)
காமாக்ஷி!கடாக்ஷி !
மோதகப் பொன்மணியுண்டதும் காஞ்சியில்
ஆடகம் பொழிந்த காமாக்ஷி !
பாதமலர்தனில் இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!
மதனை எரித்த அரனை வரித்து
மதுரையில் மணந்த மீனாக்ஷி !
பாதமலர்தனில் இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!
அன்னபூரணியாய் அரனுக்கு அன்னமிடும்
அன்னையே!காசி விசாலாக்ஷி !
பாதமலர்தனில் இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!
காயாரோஹணருடன் நாகையிலருளும்
நாயகியே !நீலாயதாக்ஷி !
பாதமலர்தனில் இப்பாமலரிடும்
பேதையேனையும் நீ கடாக்ஷி!
நன்றி :அமரர் கணபதியின் ,"காமாக்ஷி !கடாக்ஷி !"