Showing posts with label சுப்பு தாத்தா. Show all posts
Showing posts with label சுப்பு தாத்தா. Show all posts

Monday, May 20, 2013

அண்டி வந்தேன் உன்னை!



கேதாரம் மற்றும் முகாரியில் உணர்வுகளைக் குழைத்து சுப்பு தாத்தா பாடியிருப்பதைக் கேளுங்கள்! மிக்க நன்றி தாத்தா!



அன்னை அன்னை அன்னை என்று
அண்டி வந்தேன் உன்னையே
முன்னை பின்னை வினைக ளெல்லாம்
தீர்த்து வைப்பாய் அன்னையே!

ஆதியந்தம் ஏதும் இல்லா
அன் புருவே அன்னையே
பூதி பெற்ற முனிவர் களின்
முடி யிருக்கும் அன்னையே!

சோதி யோடு சோதியாகச்
சுடர்ந் தொளிரும் அன்னையே
மேதி னியில் எவரெனக்கு
பற்றிக் கொண்டேன் உன்னையே!

சோதனை மேல் சோதனைகள்
சூழ்ந் திருக்கும் போதிலும்
நாதமுன்றன் நாம மென்று
நம்பிக்கை தா அன்னையே!

பாவியேனும் பாவம் பலவும்
செய்தி ருக்கும் போதிலும்
பாதங்களைப் பற்றி விட்டேன்
பரிவு செய்வாய் அன்னையே!

நாதி யற்ற நாயனுக்கு
நல்ல வழி காட்டுவாய்
போதி மரமாகி வந்து
மாய இருள் நீக்குவாய்!


--கவிநயா

Tuesday, September 18, 2012

அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்ரம் தமிழில் 8





திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி
துந்துபி நாத ஸுபூர்ணமயே
குமகும கும்கும கும்கும கும்கும
ஷங்கநி நாதஸு வாத்யனுதே
வேத புராண திஹாச ஸுபூஜித
வைதிக மார்க ப்ரதர்ஷயுதே
ஜெயஜெய ஹே மதுசூதன காமினி
தனலக்ஷ்மி ரூபேண பாலயமாம்
.


திம்திமிதிம்திமிதிம்திமிதிம்திமி
            திம்திமிதிம்திமிஎன்றொலிக்கும்
துந்துபிநாதங்கள்முழங்கிடவே
            எழில்பூரணியாகத்திகழ்பவளே
கும்குமகும்குமகும்குமகும்கும
            கும்குமகும்குமஎன்றொலிக்கும்
சங்கத்தின்கம்பீரநாதத்தின்நடுவில்
            மங்களவடிவாய்த்திகழ்பவளே
வேதபுராணதிகாசங்களெல்லாம்
            பணிந்திடத்திகழும்பங்கயமே
அடியவர்க்கெல்லாம்சத்கதிமார்க்கத்தைக்
            காட்டியருளிடும்அன்னையளே
மதுசூதனனின்காதலியே
என்றும்ஜயஜயஜயஜயஜயமுனக்கே
அன்புடன்உன்னடிபணிகின்றோம்
            எமைதனலக்ஷ்மியேகாத்தருள்வாய்! 


--கவிநயா

இத்துடன் அஷ்டலக்ஷ்மி ஸ்தோத்திரத்தின் தமிழாக்கம் நிறைவுறுகிறது. அன்னையின் திருவடிகள் சரணம்.

எனக்காகப் பதிவிட்ட சுப்பு தாத்தாவிற்கு மனமார்ந்த நன்றிகளும் பணிவன்பான வணக்கங்களும்.


Tuesday, September 28, 2010

கருமாரி அம்மா


கருமாரி .அம்மா ... நின்
கருணைவிழி அருள்  வேண்டி
காலடியில்
காத்திருப்பேன்..       கருமாரி. அம்மா,,,

அருள் மாரி பொழிவாய் நீ
அகிலமெல்லாம் காத்திடுவாய் !
ஆயிரம் கண் உடையாய் எங்கள்
அவலங்கள் தொலைத்திடுவாய்  = கருமாரி  அம்மா

இருள் இடர் இன்னல் இங்கே
இனி இல்லை எனச் சொல்வாய் !
ஈரேழு உலகத்தாரும் 
மீண்டுவரும் வழி சொல்வாய்  = கருமாரி  அம்மா

உள்ளத்திலே குடிபுகுந்து-=என்
உள்ளத்திலே குடி புகுந்து, அருள்
வெள்ளத்தி  லதையமிழ்த்தி   

உண்மையெது ? உணரச்செய்வாய் !
*மெய்யதனைச் சுட்டெரித்து
பொய்யதனை விலகச்செய்வாய் ! == கருமாரி அம்மா

எண்ணி மகிழ்ந்த எல்லாம்
புண் என உணர்ந்தேன் நான்
ஏங்கிய சங்கதி யாவும்
வாங்கிவந்த வினை ! புரிந்தேன் !. = கருமாரி.அம்மா

ஒன்பது வாசல் என்னில்
ஒரு நாள் ஒடுங்கும் மூடும் = அன்று
நின் தாள் நான் சரணடைந்து
நிஜம் நீயே !! உணர்வேனோ ? = கருமாரி அம்மா

ஓடோடி பெற்றதெல்லாம்
ஓடியே ஒளிந்துகொள்ள
ஒப்பிலா உந்தனருள்
ஓம்காரம . வழி காட்டும். ...கருமாரி.அம்மா

அபய கரம் நினது
அண்மையிலே வந்துவிடும்.
ஐயமில்லை. அதனொளியில்
ஐக்கியம் நான் ஆகிடுவேன். ...  கருமாரி .அம்மா

*மெய்  = உடல்    
கருமாரி அம்மன் கோவிலுக்குச் சென்று பார்க்க இங்கே கிளிக்கவும்.
நன்றி: தினமலர் நாள் இதழ் .
திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் பற்றிய விவரங்கள் அறிய  இங்கே கிளிக்கவும்.
அம்மன் சன்னதியில் மனம் உருகி பாடும் பாடல்களைக் கேட்க விருப்பமா ?
இங்கே வாருங்கள்.
சுப்பு தாத்தா பாடுவதை கேட்க   பொறுமை தேவை.  விருப்பம் உள்ளவர்களுக்காக மட்டும்:
இங்கே

எழுதியது

சுப்பு ரத்தினம்