Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Tuesday, June 16, 2020

நின்னைச் சரணடைந்தேன்

வணக்கம். ஒரு மாறுதலுக்காக இன்றைக்கு என் சொந்தப் பாடல் இல்லாமல், எனக்குப் பிடித்த பாரதியார் பாடல்களில் ஒன்று:



நின்னைச் சரணடைந்தேன், கண்ணம்மா
நின்னைச் சரணடைந்தேன்
(நின்னை)

பொன்னை, உயர்வை, புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் 
தின்னத் தகாதென்று
(நின்னை)

மிடிமையும், அச்சமும், மேவி என் நெஞ்சில்
குடிமை புகுந்தன 
கொன்றவை போக்கென்று
(நின்னை)

தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின் செயல் செய்து 
நிறைவு பெறும் வண்ணம்
(நின்னை)

துன்பம் இனியில்லை, சோர்வில்லை, சோர்வில்லை, தோற்பில்லை
நல்லவை, தீயவை, நாமறியோம், நாமறியோம், நாமறியோம்
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட,
நல்லவை நாட்டுக, தீயவை ஓட்டுக்
(நின்னை)


அன்புடன்
கவிநயா

Monday, November 16, 2015

நின்னைச் சரணடைந்தேன்...




சுப்பு தாத்தா புன்னாக வராளியில் இனிமையாகாப் பாடித் தந்தது...மிக்க நன்றி தாத்தா!


நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா! நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)


--பாரதி


பி.கு. சும்மா ஒரு மாறுதலுக்காக. உங்களுக்கும் என் பாட்டையே படிச்சு அலுத்துப் போயிருக்குமில்ல? அதோட, இந்தப் பாட்டுக்கு நடனம் அமைக்கிற முயற்சியில் இருக்கறதால, இதுவே மனசுல ஓடிக்கிட்டிருக்கு... :)

Friday, July 12, 2013

MS அம்மா குரலில்: "நெஞ்சுக்கு நீதி"!

அம்மன் பாட்டில், பாரதியாரின் இந்தப் பாடல், இது வரை வராதது, வியப்பிலும் வியப்பே!
= அது என்ன நெஞ்சுக்கு நீதி?

இது, கலைஞர் கருணாநிதியின் சுயசரிதை (தன்வரலாறு) அல்ல!
அதனினும் கூர்மையான பாரதியின் வரி...
= அது என்ன நெஞ்சுக்கு நீதி? அன்னையிடம் பாரதி வேண்டுவது:



மனம் என்பது ஆறாதது!
"ஆறு மனமே ஆறு" -ன்னு சொல்லுவாய்ங்க! ஆனா ஏதோ ஒரு விடயத்திலாவது, ஆறாமல் தான் இருக்கும்... பலருக்கும்!

Plus Two-வில் இன்னும் சோம்பாமப் படிச்சிருந்தா, கூடுதலா மார்க் எடுத்திருக்கலாமோ?
எடுத்திருந்தா, அண்ணா பல்கலையில் முடிச்சி, நேரா வெளிநாடு போயிருப்பேன்;
ஆனா... இப்போ இந்த டொக்கு கம்பெனியில் வேலை பாக்குறேன்-னு, என்னிடம் அங்கலாய்த்தார் ஒரு சென்னை மேலாளர்;

அவருக்கு வயது 50:) Too much to think abt plus two:)
ஆறாமல் இருக்குது உள்ள ஒரு எண்ணம்!

* பெற்றோர் அன்பு இல்லாத குழந்தைகள்
* மனைவியின் மனதறியாக் கணவர்கள்
* கணவரின் மாண்பறியா மனைவிகள்
* தொழிலில் ஏமாற்றிய பங்குதாரர்கள்
இப்படி எத்தனையோ?

எல்லாத்தை விடவும்.........
தான் அன்பே செய்திடினும், அதை மதிக்காது எத்திய போது = நெஞ்சுக்குப் பசி; நீதி கிடைக்குமா? என்னும் பசி!


பசி-ன்னாலே அம்மா தானே!
அதான் நெஞ்சுக்கு நீதியை, அம்மாவிடமே கேட்கின்றான், தமிழ்க் கவி, பாரதி!


இன்பம் எங்கே இருக்கு? = Happiness Shop ன்னு விக்குறாங்குளா என்ன?
பத்து கிலோ வாங்கி வீட்டில் அடைச்சி வச்சிக்க முடியுமா?

இன்பம் / துன்பம் = ரெண்டுமே வெளியில் இல்ல; நம்ம நெஞ்சில் தான் இருக்கு!
= அதான் "நெஞ்சுக்கு" நீதி!

*அவள் பார்வை = தீ
*நம் துன்பம் = பஞ்சு

துன்பங்கள் எரிகையில், உள்ளத்தில் சமையல் நடந்து, உணர்விலே பசி அடங்குகிறது!
அப்படி நெஞ்சுக்கு நீதி செய்பவள் = அம்மா!

தாயே என் நெஞ்சப் பசி போக்கு; என்னை என் முருகவனுக்கே ஆக்கு!


வரிகள்: சுப்பிரமணிய பாரதியார்
குரல்: எம்.எஸ். சுப்புலட்சுமி
நூல்: பாரதியார் கவிதைகள் - தோத்திரப் பாடல்கள்




நெஞ்சுக்கு நீதியும் தோளுக்கு வாளும் 
நிறைந்த சுடர்மணிப் பூண். 
பஞ்சுக்கு நேர்பல துன்பங்களாம், இவள் 
பார்வைக்கு நேர் பெருந்தீ. 
வஞ்சனை இன்றிப் பகையின்றிச் சூதின்றி 
வையக மாந்தர் எல்லாம், 
தஞ்சம் என்றே உரைப்பீர் அவள் பேர், சக்தி 
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!

நம்புவதே வழி என்ற மறைதன்னை 
நாம் இன்று நம்பி விட்டோம் 
கும்பிட்டு எந்நேரமும் சக்தி என்றால் உனைக் 
கும்பிடுவேன் மனமே! 
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் 
அச்சம் இல் லாதபடி 
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் 
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!

வெள்ளை மலர்மிசை வேதக் கருப்பொருள்
ஆக விளங்கிடு வாய்!
தெள்ளு கலைத் தமிழ் வாணி! நினக்கொரு
விண்ணப்பம் செய்திடுவேன்,
எள் அத்தனைப் பொழுதும் பயனின்றி
இராது என்றன் நாவினிலே
வெள்ளம் எனப் பொழிவாய் சக்தி வேல், 
சக்தி வேல், சக்தி வேல், சக்தி வேல்!!

தாயே... நெஞ்சுக்கு (அன்பெனும்) நீதியை வழங்கு!
தாயே... என் நெஞ்சப் பசி போக்கு; என்னை என் முருகவனுக்கே ஆக்கு!

Friday, July 20, 2007

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்


வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறும் பாவலர் உள்ளத்தில் இருப்பாள் (வெள்ளை)

உள்ளதாம் பொருள் தேடி உணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின்று ஒளிர்வாள்
கள்ளமற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்து உட்பொருள் ஆவாள் (வெள்ளை)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்
கீதம் பாடும் குயிலின் குரலை
கிளியின் நாவை இருப்பிடம் கொண்டாள்
கோதகன்ற தொழில் உடைத்தாகி
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை உற்றாள்
இன்பமே வடிவாகிடப் பெற்றாள் (வெள்ளை)


இயற்றியவர்: மகாகவி சுப்பிரமணிய பாரதியார்
பாடியவர்: நித்யச்ரி
இராகம்: பிம்ப்ளாஸ்
பாடலைக் கேட்க

இந்தப் பாடலில் மேலும் சில செய்யுள்கள் பாரதியார் பாடியுள்ளார். அவற்றுடன் முழுப் பாடலுக்கும் பொருள் 'பாட்டுக்கொரு புலவன் பாரதி' பதிவில் விரைவில் எழுதுகிறேன்.