ஸ்ரீராஜ ராஜேஸ்வரி, இந்த
ஜெகமாளும் புவனேஸ்வரி
(ஸ்ரீ)
கரும்பினைக் கையில் ஏந்தி
பாச அங்குசம் தாங்கி
ஸ்ரீசக்ர நாயகியாய் வீற்றிருப்பாள், அன்னை
ஸ்ரீலலிதாம்பிகை துணையிருப்பாள்
(ஸ்ரீ)
திங்களை முடிமேல் சூடியிருப்பாள்
பெண்மையின் ரத்தினமாக ஜொலிப்பாள்
கண்ணிமை போலே நம்மைக் காப்பாள்
அன்புத் தாயாய் அரவணைத்திருப்பாள்
(ஸ்ரீ)
---கவிநயா



