Monday, September 12, 2011

திருவடி சரணம்



அம்மா உன்திரு வடிசரணம்
அருள்கூர்ந் திங்கே நீவரணும்
மனதின் கவலை நீக்கிடணும்
மாதா நீதான் உதவிடணும்

உன்னடியே தொழுதிடப் பழகிடணும் - உன்
பெயரே நாவில் தவழ்ந்திடணும்
நாளும் உனையே போற்றிடணும் - உன்
பெருமை தனையே பாடிடணும்

உன்சொல் ஒன்றே கேட்டிடணும் - உன்
விருப்பம் போலே வாழ்ந்திடணும்
நீயே கதியென் றுணர்ந்திடணும் - உன்
காலடியில் நான் கிடந்திடணும்


--கவிநயா

4 comments:

  1. படத்தைப் பெரிசுபண்ணிப் பார்த்தேன்;அந்தப்பாதங்களைவிட்டுக் கண் அகல மறுக்கிறது!

    "உன் காலடியில் நான் கிடந்திடணும்"..நானும்!

    ReplyDelete
  2. //நாளும் உனையே போற்றிடணும் - உன்
    பெருமை தனையே பாடிடணும்//

    நாளும் இப்பணியை செய்யும் தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்

    ReplyDelete
  3. வாங்க லலிதாம்மா. நன்றி :)

    ReplyDelete
  4. //நாளும் இப்பணியை செய்யும் தங்களுக்கு என் பணிவான வணக்கங்கள்//

    செய்ய வைத்திருப்பவளுக்கு என் வணக்கங்களும், உங்களுக்கு என் நன்றிகளும், கைலாஷி :)

    ReplyDelete