Thursday, August 15, 2013

ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றி..

வாசகர்கள் அனைவருக்கும் இனிய வரலக்ஷ்மி விரத வாழ்த்துக்கள்!

வெறும் லட்சுமி -ன்னு சொன்னாலே = அது மங்களம் தான்!
வர லட்சுமி -ன்னு சொல்லும் போது = மங்களம் என்ற சொல்லுக்கே மங்களம்!

வரலட்சும் விரதம்: தமிழகத்தில் ஒரு சாரார் மட்டுமே கொண்டாடினாலும், ஆந்திரம்/ கர்நாடகத்தில், மிகப் பலரும் கொண்டாடுவது;

சிறு வயதிலிருந்தே, எங்கள் வீட்டில், வரலட்சுமி விரதப் பழக்கம் கிடையாது!
ஆனால், பக்கத்து வீட்டிலிருந்து, வட்டிலோடு சர்க்கரைப் பொங்கல் வந்து விடும், இன்ன பிற பலகாரங்களோடு:)
சொய்யம் (சுகியம்), உப்புக் கொழுக்கட்டை, நவதானியச் சுண்டல்!
மிளகு வடை= my fave fave favorite along with athirasam:)

பாட்டு போடச் சொன்னா, இவன் பட்டியல் போடுறானே -ன்னு கவிநயா-க்கா முறைக்கும் முன் நிப்பாட்டிக்குறேன்:)

மங்களமான நாட்களில் மங்களமான இசை கேட்பது பெரும் பாக்கியம்!
*மங்கள இசை -ன்னா = அது நாதசுரம்!
*குரலில் மங்களம் -ன்னா = அது எம்.எஸ் அம்மா/ சுசீலாம்மா

வீணை ஒலிக்க, அப்படியே, கடலில் நிலவு எழுவது போல், எழும் பாட்டு! சுசீலாம்மா, "திருமகளே, திருமகளே" -ன்னு உருகிப் பாடுவது...
ஒரு கட்டத்தில் வீணையா? சுசீலாம்மாவா? என்பது போல் போட்டியிட்டுச் செல்லும் அற்புதப் பாடல்...

ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம் -ன்னு மிக அழகிய வரிகள்.. கவிஞர். கருமாரி. சோமு எழுதியது; கேட்டுக் கொண்டே, படித்து மகிழுங்கள்!


ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்..
பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்..
குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்..
பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை............. திருமகளே!

திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
(திருவிளக்கை)

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
(அலைமகளே வருக)

மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்!

சங்கு சக்ரதாரி நமஸ்காரம்!
சகலவரம் தருவாய் நமஸ்காரம்!
பத்ம பீட தேவி நமஸ்காரம்!
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்!!!
அகலகில்லேன் என்று அலர் மேல் மங்கைத் தாயார்!
இசை: கண்மணி ராஜா
குரல்: பி.சுசீலா
வரிகள்: கவிஞர். கருமாரி சோமு

6 comments:

  1. ஹை! எனக்குப் பிடித்த பாட்டு. நன்றி கண்ணா.

    ReplyDelete
  2. அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!

    அருமையான நாளில் அழகான பாட்டு..!

    ReplyDelete
  3. Enter your comment...I LOVE THIS SONG

    ReplyDelete