Sunday, October 13, 2013

காளையர்க்கு ஒரு ராத்திரி! கன்னியர்க்கு நவ ராத்திரி!

ஒன்பது இரவுகளின் நிறைவாக...
அன்னைக்கு..
நிறைவான குரலில், நிறைவான மாலை = சுசீலா மாலை!

நவராத்திரி என்றே படம்!
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் = ஒன்பது பாத்திரங்களில் ஒளிர்ந்த திரைக் காவியம்!

இயக்குநர் AP நாகராஜன் கை வண்ணத்தில்...
*நடிகையர் திலகம் சாவித்ரி, ஒவ்வொரு இரவாக, காட்சி நகர்ந்து..
*ஒன்பதாம் நாள் நிறைவில்...
*காதல் கொண்டவனையே மணக்கும் காவியம்!

நவரசங்களும், ஒவ்வோர் இரவு நிகழ்ந்து...
1. வியப்பு
2. பயம்
3. கருணை
4. கோபம்
5. சிரிப்பு
6. அருவருப்பு
7. வெட்கம்
8. வீரம்
9. (அமைதி)
மனம் போல் திருமணம் இனிதே நிகழும் கதை!

நவராத்திரியில், "கல்யாண வல்லி"யாகக் கொலுவிருக்கும் அன்னையை..
அவ்வண்ணமே வேண்டுவோம்!



நவராத்திரி சுப ராத்திரி
நவராத்திரி சுப ராத்திரி

அலைமகளும் கலைமகளும்
கொலுவிருக்கும் ராத்திரி
மலைமகளும் சேர்ந்து நம்மை
மகிழ வைக்கும் ராத்திரி

கவிஞர் நெஞ்சில் கற்பனைகள் ஊறுவதும் ராத்திரி
கலைஞர் எல்லாம் அரங்கத்திலே சேருவதும் ராத்திரி
நாள் முடிந்து தொடங்கும் இடம் நடு ராத்திரி - இள
நங்கையர்கள் போற்றுவதும் நவராத்திரி
(நவராத்திரி சுப ராத்திரி)

தூக்கமில்லா மனிதரையும் தூங்க வைக்கும் ராத்திரி
சுழன்று வரும் பூமிக்கெல்லாம் அமைதி தரும் ராத்திரி
காளையர்க்கு ஓர் இரவு சிவ ராத்திரி - ஆனால்
கன்னியர்க்கு ஒன்பது நாள் நவ ராத்திரி
(நவராத்திரி சுப ராத்திரி)


குரல்: பி.சுசீலா
வரி: கண்ணதாசன்
இசை: கே.வி. மகாதேவன்
படம்: நவராத்திரி


2 comments:

  1. என்னவொரு சிறப்பான பாடல்... நன்றி...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. நவராத்திரி பற்றி விளக்கும் அருமையான கண்ணதாசனின் வரிகள்

    ReplyDelete