Monday, July 21, 2014

நாள் எதுவோ?



சிந்து பைரவியில் சுப்பு தாத்தா மனமுருகிப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


 
வேல் விழி எனைத் துளைக்க
வேதனை தனைத் தீர்க்க
நாள் படுமோ? என்று துயர் விடுமோ?

பால் முகம் எனைப் பார்க்க
கனி யிதழ் தனை விரிக்க
நாள் படுமோ? என்று நலம் வருமோ?

உன் விழி நினைவாட
என் விழி நீராட
மனம் வருமோ? என்று சுகம் வருமோ?

கனவிலும் வரவில்லை
நனவிலும் நீயில்லை
இரண்டிலும் நீ வரும் நாள் எதுவோ?

ஒரு தலை அன்பிதுவோ
தறுதலைப் பிள்ளைக்கு
ஆறுதலை நீ தரும் நாள் எதுவோ?

கவிதையில் நீயுண்டு
கண்ணீரில் நீயுண்டு
களிப்பென நீ வரும் நாள் எதுவோ?


--கவிநயா

No comments:

Post a Comment