Monday, January 12, 2015

என்ன மாயம் செய்தாய் தாயே!


விழியழகைப் பார்க்கையிலே
விதி மறந்து போகிறதே
மதிமுகத்தைப் பார்க்கையிலே
மதி மயங்கிச் சாய்கிறதே!

என்ன மாயம் செய்தாய் தாயே
என்கல்மனம் கரைத்தாய் நீயே
கற்சிலையாய் நிற்கும் போதும்
காந்தமாகி இழுத்தாயே!

இதழ் விரியும் புன்னகையில்
இதயம் மலர்ந்து விரிகிறதே
உதயம் உந்தன் வதனம் என்றே
இதய வானம் மகிழ்கிறதே!

என்ன மாயம் செய்தாய் தாயே
என்கல்மனம் கரைத்தாய் நீயே
கற்சிலையாய் நிற்கும் போதும்
காந்தமாகி இழுத்தாயே!

சிப்பி தந்த முத்து ஒன்று
சிமிழ் மூக்கில் ஒளிர்கிறதே
சித்த மெலாம் உன்னை நினைந்து
பித்த மயக்கம் கொள்கிறதே!

என்ன மாயம் செய்தாய் தாயே
என்கல்மனம் கரைத்தாய் நீயே
கற்சிலையாய் நிற்கும் போதும்
காந்தமாகி இழுத்தாயே!


--கவிநயா
 

2 comments:

  1. அழகான வரிகள்
    நன்றி அக்கா!

    ReplyDelete