Monday, March 30, 2015

மலயத்வஜன் மகள்!


மணிராக் ராகத்தில் சுப்பு தாத்தா மணிமணியாய்ப் பாடியது... மிக்க நன்றி தாத்தா!



மாநிலம் ஆளுகின்ற மங்கல மீனாட்சி!

மலயத்வஜன் மகளே மனமெல்லாம் உனதாட்சி!

(மாநிலம்)



மதங்கரின் மகளாக அவதரித்த தேவி!

மதுரை நகர் தந்த மாமணியே ராணி!

(மாநிலம்)



காஞ்சன மாலையின் தவப் பயனாய் வந்தாய்!

கண்கவர் சுந்தரனின் மனங்கவர்ந்து வென்றாய்!

பக்தர்களின் குறை தீர்க்க பச்சைக்கிளி ஏந்தி நின்றாய்!

சித்தமெல்லாம் சிவனுடனே நர்த்தனங்கள் ஆடுகின்றாய்!

(மாநிலம்)


--கவிநயா

No comments:

Post a Comment