Monday, July 20, 2015

ஆடி மாசம் வந்தது!


ஆடி மாசம் வந்ததடி
ஆத்தா நெனப்பு தந்ததடி
(ஆடி)

கூழு காச்சிக் குடுத்தாலும்
குளிர்ந்திடுவா மகமாயி
வேப்பிலையின் நுனியினிலும்
குடியிருக்கும் கருமாரி
(ஆடி)

கோடிக் கோடி பக்தரெல்லாம்
குமரி அவளைப் பாடிடுவார்
ஓடு என்று வினை விரட்டும்
தேவியைக் கொண் டாடிடுவார்
(ஆடி)

நம்பி வரும் பிள்ளைகளை
தாங்கிக் கொள்ளும் தாயவளாம்
வெம்பி வருந்தும் உள்ளங்களில்
சந்தனமாக் குளிர்பவளாம்
(ஆடி)


--கவிநயா

 

No comments:

Post a Comment