Monday, October 19, 2015

நான்முகன் நாயகி

சுப்பு தாத்தா சிந்து பைரவியில் பாடிக் கலக்கியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



நான்மறை வடிவினள், நான்முகன் நாயகி
தாமரைப் பூமடி தாங்கிடும் பூங்கொடி
(நான்மறை)

தூவெண் கலை யுடுத்தி தூயவள் வீற்றிருப்பாள்
பால் வெள்ளை உள்ளங்களில் தாயவள் குடியிருப்பாள்
(நான்மறை)

ஒலியினில் ஒளியினில் உத்தமி அவள் இருப்பாள்
கலைகளின் வடிவினில் கருத்தினில் அவள் இருப்பாள்
ஞாலமெங்கும் ஞான வடிவினளாய் இருப்பாள்
நாளும் துதிப்பவர்க்கு நல்லருள் புரிந்திடுவாள்
(நான்மறை)


--கவிநயா


2 comments:

  1. அழகான வரிகள்
    நன்றி அக்கா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஷைலன்!

      Delete