Monday, January 18, 2016

பிள்ளை எனை நீ காவாயோ?

அம்பிகை அஷ்டகம் - 5

ஏங்கித் தவிக்கும் குரல் கேட்டும்
ஏனென்காது இருப்பதுமேன்?
தாங்கிக் கொள்ளத் தாயிருந்தும்
தனியாய் நானும் தவிப்பதுமேன்?
காக்கை கூடத் தன்குஞ்சை
பொன்குஞ் சென்றே போற்றிடுமாம்
என்னை ஈன்ற என் தாயே
பிள்ளை எனை நீ காவாயோ?


--கவிநயா

(தொடரும்)


 

No comments:

Post a Comment