Monday, August 15, 2016

உலகமெல்லாம் உன் வடிவே!



கீதாம்மாவின் இனிய குரலில், வசந்தா ராகத்தில்.... மிக்க நன்றி கீதாம்மா, சுப்பு தாத்தா!  

உலகமெல்லாம் அம்மா உன் வடிவே
சுகங்களெல்லாம் தரும் உன் நினைவே
(உலகமெல்லாம்)

அருள் என்னும் சொல்லுக்குப் பொருள் நீயே, உண்மை
அன்புக்கு அகப்படும் எழில் தாயே
(உலகமெல்லாம்)

பாலையில் தென்படும் குளிர் சோலை, எந்தன்
பாதையில் ஒளி தரும் உன் விழிப் பார்வை
தேவையெல்லாம் தீர்க்கும் கற்பகமே, எந்தன்
தேவையெல்லாம் பாவையுந்தன் பொற்பதமே
(உலகமெல்லாம்)



--கவிநயா


தில்லை அகத்து க்ரானிக்ல்ஸ் பதிவாளர்
திருமதி கீதா ரங்கன் அவர்கள் பாடலை பாடுகிறார்கள்.

ராகம் வசந்தா.


Geetha Rangan sings so beautifully in Raag Vasantha here.

No comments:

Post a Comment