Monday, April 17, 2017

திரு மயிலை



கீதாம்மா தன் இனிய குரலில்...ஹம்ஸநாதம் ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

அழகு நிறைந்த மயிலே
ஆடி யாடி வாயேன்
உன்னழகில் மயங்கியதால்
உலகில் வந்தாள் தாயே
(அழகு)

அன்றொரு நாள் கயிலையிலே பாடம் நடந்தது, ஒரு
மயிலின் அழகால் அன்னை மனதில் சலனம் வந்தது
கண்ட எந்தை சிவனின் விழிகள் இரண்டும் சிவந்தது, அன்னை
புவியில் பிறவி எடுத்திடவே சாபம் பிறந்தது
(அழகு)

அன்னையவள் உன்னுருவில் புவியில் உதித்தாள்
ஒரு மனதாய்ப் பதியை நினைந்து நாளும் துதித்தாள்
மனங் குளிர்ந்த ஈஸ்வரனைக் கடிமணம் புரிந்தாள்
கயிலையின் மறுவடிவாய்த் திரு மயிலையை அமைத்தாள்
(அழகு)


--கவிநயா


2 comments:

  1. அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஷைலன்!

    ReplyDelete