Monday, May 8, 2017

அன்னை உன்னை நினைத்தால்!



கீதாம்மா தன் இனிய குரலில்...சாவேரி ராகத்தில்... மிக்க நன்றி கீதாம்மா!

நினைத்த காரியம் கை கூடும்

நடக்கும் யாவையும் நலமாகும்

அன்னை உன்னை நினைத்தால்

உந்தன் அன்பில் திளைத்தால்

(நினைத்த)



வித்தைகள் யாவையும் கைசேரும்

சத்தியம் நெஞ்சிலே நிலையாகும்

அன்னை உன்னை நினைத்தால்

உந்தன் அன்பில் திளைத்தால்

(நினைத்த)



பக்திநம் மனதிலே பயிராகும்

சித்தம் எல்லாம் சிவை மயமாகும்

அன்னை உன்னை நினைத்தால்

உந்தன் அன்பில் திளைத்தால்

(நினைத்த)



பித்தம் எல்லாம் நீயே என்றாகும்

முக்தியும் கூட நம் வசமாகும்

அன்னை உன்னை நினைத்தால்

உந்தன் அன்பில் திளைத்தால்

(நினைத்த)


--கவிநயா 


2 comments:

  1. பித்தம் எல்லாம் நீயே என்றாகும்
    முக்தியும் கூட நம் வசமாகும்
    அன்னை உன்னை நினைத்தால்
    உந்தன் அன்பில் திளைத்தால்!


    அழகான வரிகள்
    நன்றி அக்கா !

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி, ஷைலன்!

      Delete