Monday, August 7, 2017

வர வேண்டும்!



வெள்ளியன்று வரலக்ஷ்மி நோன்பிற்காக எழுதியது... உடனே பதிவிட முடியவில்லை...


கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

வரவேண்டும் வரவேண்டும் வரலக்ஷ்மி தாயே
தரவேண்டும் தரவேண்டும் அருட்செல்வம் நீயே
(வரவேண்டும்)

பாற்கடலில் உதித்த பரம எழில் வடிவே
பரந்தாமனின் மார்பில் குடிபுகுந்த திருவே
(வரவேண்டும்)

சகல செல்வங்களுக்கும் அதிபதி நீயே
சௌந்தர்ய ரூபிணியே சந்த்ர சகோதரியே
நிலையில்லா செல்வங்களில் நேசம் வையா மனமும்
விலையில்லா பக்தியையும் நிலையாகத் தந்தருள
(வரவேண்டும்)


--கவிநயா 



No comments:

Post a Comment