Monday, April 16, 2018

அகிலாண்டேஸ்வரி




சுப்பு தாத்தா வின் இசையில்... குரலில்... மிக்க நன்றி தாத்தா!

கீதாம்மா வின் இனிய குரலிலும்... மிக்க நன்றி கீதாம்மா!

அகிலாண்டேஸ்வரி, ஆதிசிவன் நாயகி
அன்னை அன்ன பூரணி, வீர சிம்ம வாஹினி
(அகிலாண்டேஸ்வரி)

சுந்தர முகத்தழகி, செந்தூர நிறத்தழகி
முத்தெழில் நகையழகி, மோகன வடிவழகி
(அகிலாண்டேஸ்வரி)

சிவனுடன் ஒன்றானாய், சிவசக்தி என்றானாய்
பரசிவன் துணையானாய், அருள்தரும் இணையானாய்
தில்லை சிவகாமிநீ, வாமி அபிராமிநீ
அண்டமாளும் ராணிநீ, அன்புசெய்யும் தாயும்நீ
(அகிலாண்டேஸ்வரி)


--கவிநயா

No comments:

Post a Comment