Tuesday, January 15, 2019

சஞ்சலம் தீர்ப்பாய்!

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்! அன்னையின் அருள் அனைவைர் இல்லத்திலும் பால் போலவே பொங்கட்டும்!



மனதின் சஞ்சலம் தீர்ப்பாய் அம்மா
மடியினில் ஏந்தி காப்பாய் அம்மா
(மனதின்)

எந்தையின் இடப்புறம் நிலைத்திட்டாய் அம்மா
என்னையும் ஒருபொருளாய் நினைப்பாயோ அம்மா?
பண்ணெடுத்துப் பாடும் பிள்ளையெனைப் பார்க்க
கண்ணெடுத்தால் போதும், கவலையெல்லாம் தீரும்
(மனதின்)

பலமுறை அழைத்து விட்டேன், பாராமுகம் ஏனோ?
சிலையென நீ இருந்தால், அது தருமந் தானோ?
மலையென உனைத்தானே நம்புகிறேன் தாயே
வலையினில் அகப்பட்டேன் மீட்டிடுவாய் நீயே
(மனதின்)


--கவிநயா



No comments:

Post a Comment