Monday, February 18, 2019

பெற்றோருக்கு...



நாளும் பொழுதும் நானுனை நினைந்தேன்
நாவினில் உன்நாமம் அனுதினம் வரைந்தேன்
திருமுகத் தாமரை இதயத்தில் பதித்தேன்
நீயே கதியென தினந் தினம் துதித்தேன்
(நாளும்)

அருமை மிகும் அன்னை தந்தையைத் தந்தாய்
அவர் வடிவாய் நின்றுன் அன்பினைத் தந்தாய்
அன்பொடு கல்வியும் செல்வமும் தந்தாய்
அனைத்தையும் போற்றிட செந்தமிழ் தந்தாய்
(நாளும்)

அன்னைக்கும் தந்தைக்கும் ஈடெது உலகில்
துன்பமெல்லாம் மறையும் அவர்களின் நிழலில்
அவர்களுக்(கு) உடல்நலம் உளநலம் தருவாய்
அன்புடை வாழ்வும் நீள் ஆயுளும் தருவாய்
(நாளும்)


--கவிநயா

1 comment: