Tuesday, April 30, 2019

உன்னை நம்பி...



உலகமெல்லாமும் உனதாட்சி, எந்தன்
உள்ளத்திலே உந்தன் திருக்காட்சி
(உலகமெல்லாம்)

என்னுள்ளம் வாழும் தெய்வம் நீயம்மா, எனக்கு
உனையன்றி வேறு துணை ஏதம்மா
(உலகமெல்லாம்)

துன்பக் கடலினுள்ளே முழுக வைத்தாய், அதில்
துடுப்பென உன் நினைவை நீ கொடுத்தாய்
சூழும் பழ வினைகள் அழித்திடுவாய், இங்கே
வாழ உனதருளை அளித்திடுவாய்
(உலகமெல்லாம்)


--கவிநயா

No comments:

Post a Comment