Wednesday, June 19, 2019

என் துணை



கண்ணோடு கனிவாக இருப்பவளே
என்னோடு துணையாக வருபவளே, அம்மா
(கண்ணோடு)

முன்னோடும் வினையெல்லாம் அழிப்பவளே, உன்
பின்னோடு வருபவர்க்கு அருள்பவளே
(கண்ணோடு)

சித்தத்திலே விளங்கும் சிவையவளே, எழில்
உத்தமியே எந்தை உமையவளே
பக்தியிலே மகிழும் மலைமகளே, சிவ
சக்தியென அருளும் பரம்பொருளே
(கண்ணோடு)



--கவிநயா

No comments:

Post a Comment