Monday, June 29, 2020

தித்திக்கும் தேன் நீ


சித்திரப் பூவே சித்திரப் பூவே

தித்திக்கும் தேனே

உன்னை பத்திரமாயென்றன்

நெஞ்சுக்குள்ளே நான்

பூட்டி வைத்தேனே, தேனே, தேனே

(சித்திரப் பூவே)

 

உள்ளத்தில் பூவாசம் உன்னாலே, அது

எண்ணத்திலே வீசும் தன்னாலே

பள்ளத்தில் விழுந்து துவளும் போதும்

பிள்ளை போலக் காக்கும் அன்பாலே

(சித்திரப் பூவே)

 

தாயின் கர்ப்பத்திலே பிள்ளை உண்டு, இங்கே

பிள்ளை கர்ப்பத்திலே தாயும் உண்டு

உள்ளம் என்னும் கர்ப்பக் கிருகத்திலே

நாளும் உன்னைத் தானே பூசிக்கின்றேன்

(சித்திரப் பூவே)



--கவிநயா


No comments:

Post a Comment