Monday, July 20, 2020

மீனாக்ஷி


மதுரையிலே வீற்றிருப்பாள்

மனசுக்குள்ளே பூத்திருப்பாள்

மீன் போன்ற விழியால் இந்த

மேதினியைக் காத்திருப்பாள்

 

மீனாள் எனும் நாமம் கொண்டாள்

ஈசனிடம் காதல் கொண்டாள்

வீரங்கொண்ட இராணியவள்

வேதம் போற்றும் தேவியவள்

 

திக்விஜயம் செய்தவளாம்

திக்கெட்டும் வென்றவளாம்

தித்திக்கும் தேனவளாம்

எத்திக்கும் நிறைந்தவளாம்

 

பட்டுப்போல் எழில்மேனி

பரந்திருக்கும் கருங்கூந்தல்

பரமசிவன் மேனியிலே

பாதியான பார்வதியாம்


--கவிநயா




No comments:

Post a Comment