Monday, January 11, 2021

தங்க நிழல் தருவாய்!

 

தங்க நிழல் தருவாய் அம்மா, தந்து

அஞ்ச லென்று அருள்வாய் அம்மா

(அம்மா...தங்க)

 

தஞ்சம் என்று தேடி வந்தேன்

மங்கையுன்றன் மலர்ப்பாதம்

கொஞ்சம் உன்றன் கண் பார்த்தால்

என்றன் நெஞ்சின் வலி தீரும்

(தங்க)

 

ஆனைமுகன் கணபதிக்கு

அன்னை நீயே உயிர் கொடுத்தாய்

ஆறுமுகன் ஒரு முகனாய்

ஆக்கி வைத்து வேல் கொடுத்தாய்

 

நானும் உன்றன் பிள்ளையன்றோ

நீயேஎன்றன் அன்னையன்றோ

சேய் மறந்த தாயும் நீயோ

நாயேன் என்னைக் கண் பாராயோ

(தங்க)



--கவிநயா

No comments:

Post a Comment