Monday, February 15, 2021

அருள் வேண்டி...


அருள் வேண்டி அருள் வேண்டி அம்மா நான் தவமிருந்தேன்

இருள் நீங்க மருள் நீங்க அருள்வாய் அம்மா

 

மலை போலத் துன்பங்கள் வழியெங்கும் காண்கின்றேன்

பனியாக அவற்றை நீ பணிப்பாயம்மா

 

அலை போல ஆசைகளில் அலைபாயும் என் மனதில்

நிலையாக நீ வந்து நிற்பாயம்மா

 

உலையிட்ட சோறாகக் கொதிக்கின்ற வாழ்வினிலே

நிலை பெற்ற நிலவாகிக் குளிர்வாயம்மா

 

சிலையாக நின்றாலும் உயிராகி ஒளிர்ந்தாலும்

கலையாத அன்பை நீ தருவாயம்மா

 

விலகாமல் உன் பாதம் விரும்பிநிதம் தொழ வேண்டும்

அகலாமல் என்னோடு இருப்பாயம்மா

 

தாயில்லாக் கன்றைப் போல் தவிக்கின்ற குரல் கேட்டு

வா என்று சொல்லும் முன் வருவாயம்மா

 

பிழையென்ன செய்தாலும் பிள்ளையுன் பிள்ளை தான்

மழையென்ன உன்னன்பைப் பொழிவாயம்மா


--கவிநயா


2 comments:

  1. விலகாமல் உன் பாதம் விரும்பிநிதம் தொழ வேண்டும்
    அகலாமல் என்னோடு இருப்பாயம்மா
    நன்றி அக்கா!

    ReplyDelete