Monday, July 5, 2021

எல்லாம் உன்னருளே

 


உன்னருளாலே உன்னருளாலே

உலகமெல்லாம் உன்னருளாலே

உன்னருளாலே உன்னருளாலே

உயிர்களெல்லாம் உன்னருளாலே

(உன்)

 

முன்னவளே எழிற்பெண்ணவளே

பின்னவளே எனைப் பெற்றவளே

கண்ணவளே கனியமுதவளே

அன்னையளே அன்பினியவளே

(உன்)

 

எந்தையுடன் எனையாண்டிடவே

சிந்தையிலே வந்தருளிடுவாய்

முந்தைவினை எனைவிட்டிடவே

முந்திவந்துன்பதம் பற்றிடவே

 

கந்தன் கணபதி தாயவளே

இந்தப் பிள்ளையும் உனதன்றோ

சந்தத் தமிழினில் ஏத்துகிறேன்

வந்தருள்வாய் அருள்தந்தருள்வாய்

(உன்)


--கவிநயா



No comments:

Post a Comment