Tuesday, August 17, 2021

உன்னருளால்...

உன்னருளாலே வாழுகின்றேன்

உன் நினைவன்றி எதை நாடுகின்றேன்?

உன் புகழை நிதம் பாடுகின்றேன்

உன் திருவடி மலர் சூட ஏங்குகின்றேன்

(உன்னருளாலே)

 

உள்ளத்திலே வருவாய்

எண்ணத்திலே நிறைவாய்

கள்ளமில்லாப் பிள்ளை

உள்ளந்தனைத் தருவாய்

(உன்னருளாலே)


சிந்தையில் உன் தோற்றம்

தந்திடும் ஒரு மாற்றம்

வந்தித்து உன்னிருதாள்

பணிவதுவே ஏற்றம்

(உன்னருளாலே)

  

 --கவிநயா

 

No comments:

Post a Comment