(1)
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
சுந்தரி நிரந்தரி சந்திர ஜடாதரி
சங்கரி சௌந்தரியே
அந்தரி அனந்தரி அகிலாண்ட நாயகி
ஆதி நீ ஜோதி நீயே
பார் போற்றும் தேவியே பூலோகம் மீதிலே
நான் போற்றும் அன்னை நீயே
கார் மேகம் போலவே கருணையைப் பொழிகின்ற
கன்னியே கனிவின் வடிவே
மீன் போன்ற விழியாலே மேதினியைக் காக்கின்ற
மங்கையே மாதரசியே
அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற
அன்னை மீனாட்சி உமையே
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
--கவிநயா
No comments:
Post a Comment