Sunday, October 3, 2021

அன்னை மீனாட்சி உமையே - 3

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

 

நேரான கூர் நாசி ஓரத்திலே முத்து

மூக்குத்தி ஒளி வீசிட

 

புல்லாக்கிலே தொங்கும் சிவப்புக்கல் உதட்டோடு

கொஞ்சிக் கொஞ்சிப் பேசிட

 

பவழத்தை யொத்த இதழ் மலர் போலவே விரிந்து

குறு நகைக்கு எழில் கூட்டிட

 

கன்னக் கதுப்பு சிவன் காதலுடன் முகம் பார்க்கும்

கண்ணாடியாய் மின்னிட

 

பல கோடிப் பிள்ளைகளைக் கடைக் கண்ணால் காக்கின்ற

பங்கயக் கண்ணரசியே

 

அழகான மதுரையை வளமாக ஆள்கின்ற

அன்னை மீனாட்சி உமையே

 

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்



--கவிநயா



No comments:

Post a Comment