Showing posts with label ஆதிபராசக்தி. Show all posts
Showing posts with label ஆதிபராசக்தி. Show all posts

Wednesday, April 1, 2009

மீனாட்சி என்ற பெயர் எனக்கு! பங்குனியில் ஒரு நவராத்திரி - 2

மதுரை மீனாட்சியம்மன் ஆலயக் குடமுழுக்கு - நன்னீராட்டு விழாப் பதிவுகளின் தொடர்ச்சியாக இன்று...பிரபல பாடல்...நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே!
சமயபுரத்து அம்மன் சன்னிதியில், வெள்ளைக்காரத் துரை (மேஜர் சுந்தரராஜன்) அட்டகாசம் செய்யும் போது, அம்மை நோய் தாக்கி அலறுவார்!
அப்போது, மனம் திருந்தி, வேண்டுதல் மேற்கொள்ள, துன்பம் தீருவார்! அந்த நேரத்தில் உதிக்கும் பாட்டு இது! இசையரசி சுசீலாம்மாவின் இன்குரலில்...

அத்தனை அம்மன்கள் இருந்தாலும், சமயபுரத்தாளே, "நான்மாடக் கூடலிலே நான் மீனாட்சி" என்று தான் துவங்குகிறாள்! அதை இன்று அன்பர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறோம்! குடமுழுக்கு நாயகி மீனாட்சி திருவடிகளே சரணம்!




படம்: ஆதிபராசக்தி
குரல்: பி.சுசீலா
இசை: கே.வி.மகாதேவன்
வரிகள்: உடுமலை நாராயண கவி

நானாட்சி செய்து வரும் நான்மாடக் கூடலிலே
மீனாட்சி என்ற பெயர் எனக்கு


கங்கை நீராட்சி செய்து வரும் வடகாசி தன்னில்
விசாலாட்சி என்ற பெயர் வழக்கு

கோனாட்சி பல்லவர் தம் குளிர்சோலை காஞ்சி தன்னில்
காமாட்சி என்ற பெயர் எனக்கு

கொடும் கோலாட்சி தனை எதிர்க்கும் மாரியம்மன் என்ற பெயர்
கொண்டபடி காட்சி தந்தேன் உனக்கு

ஆறென்றும் நதியென்றும் ஓடை என்றாலும் அது
நீரோடும் பாதை தன்னைக் குறிக்கும் - நிற்கும்


ஊர் மாறி, பேர் மாறி, கரு மாறி, உரு மாறி,
ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!

ஒன்றே ஓம் சக்தியென உரைக்கும்!


காஞ்சி காமாட்சி - மதுரை மீனாட்சி - காசி விசாலாட்சி