Monday, November 16, 2015

நின்னைச் சரணடைந்தேன்...




சுப்பு தாத்தா புன்னாக வராளியில் இனிமையாகாப் பாடித் தந்தது...மிக்க நன்றி தாத்தா!


நின்னைச் சரணடைந்தேன்! - கண்ணம்மா! நின்னைச் சரணடைந்தேன்!

பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று ... (நின்னை)

மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
குடிமை புகுந்தன, கொன்றவைபோக் கென்று . ... (நின்னை)

தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவு பெறும்வளம் ... (நின்னை)

துன்ப மினியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை,
அன்பு நெறியில் அறங்கள் வளர்த்திட ... .(நின்னை)

நல்லது தீயது நாமறியோம்! அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக! ... (நின்னை)


--பாரதி


பி.கு. சும்மா ஒரு மாறுதலுக்காக. உங்களுக்கும் என் பாட்டையே படிச்சு அலுத்துப் போயிருக்குமில்ல? அதோட, இந்தப் பாட்டுக்கு நடனம் அமைக்கிற முயற்சியில் இருக்கறதால, இதுவே மனசுல ஓடிக்கிட்டிருக்கு... :)

No comments:

Post a Comment