Showing posts with label புவனேஸ்வரி. Show all posts
Showing posts with label புவனேஸ்வரி. Show all posts

Tuesday, April 24, 2018

புதுக்கோட்டையில் புவனேஸ்வரி




கீதாம்மா வின் இனிய குரலில்... மிக்க நன்றி கீதாம்மா!

பதமலர் போற்றுகின்றேன் புவனேஸ்வரி, உந்தன்
பாதங்களே கதியெனக்கு ஜெகதீஸ்வரி
(பதமலர்)

அன்பு வடிவாய் நின்றாய் மதுரையிலே
அருள் வடுவாய் அமர்ந்தாய் காஞ்சியிலே
முக்தி தர மனம் வைத்தாய் காசியிலே
புவனேஸ்வரி யானாய் புதுக்கோட்டையிலே
(பதமலர்)

இகபர சுகத்தினிலே உழலுகின்றேன், உந்தன்
காலடி நிழல் தந்து காத்திடுவாய்
அபயம் அபயம் என்று ஓடி வந்தேன், எனக்கு
அடைக்கலம் உனையன்றி எவர் தருவார்?
(பதமலர்)


--கவிநயா