Saturday, June 30, 2007

"மாரியம்மன் தாலாட்டு" 12 [272-300]


"மாரியம்மன் தாலாட்டு" 12 [272-300]


ஓம் சக்தி துணை

மாரியம்மன் துணை

எத்தேசத்திலும் இடைவிடாமற் சிந்தித்து வரும்


"மாரியம்மன் தாலாட்டு"
[வரிகள் 272-300]




மாரியென்றால் மழைபொழியும்


தேவியென்றால் தேன்சொரியும்


தேவியென்றால் தேன்சொரியும் திரிபுர சுந்தரியே


திரிபுர சுந்தரியே தேசத்து மாரியம்மா


பொன்னுமுத்து மாரியரே பூரண சவுந்தரியே


தாயாரே பெற்றவளே சத்தகன்னி சுந்தரியே


பேரு மறியேனம்மா பெற்றவளே தாயாரே


குருடன்கைக் கோலென்று கொம்பனையே நீயறிவாய்


கோலைப் பிடுங்கிக்கொண்டால் குருடன் பிழைப்பானோ [280]


இப்படிக்கு நீயிருந்தால் இனி பிழையோம் தாயாரே

கலிபிறக்கு முன்பிறந்த கனத்ததோர் மாரிமுத்தே


யுகம்பிறக்கு முன்பிறந்த உத்தண்ட மாரிமுத்தே


கலியுகத்தில் தாயாரே கண்கண்ட தெய்வம் நீ


உன்னைப்போல் தெய்வம் உலகத்தில் கண்டதில்லை


என்னைப்போல் மைந்தர்தான் எங்குமுண்டு வையகத்தில்


அனலை மதியாய் நீ யாவரையும் சட்டை பண்ணாய்


புனலை மதியாய்நீ பூலோகஞ் சட்டைபண்ணாய்


வருந்தி யழைக்கிறேனுன் திருமுகத்தைக் காணாமல்


பாலகனைக் காத்துப் பாதத்தா லுதைத்துவிடு [290]


மைந்தனைக் காத்து மகராசி உதைத்துவிடு


குழந்தையைக் காத்து கொம்பனையே உதைத்துவிடு


ஆதிபரஞ்சோதி அங்குகண்ணே வாருமம்மா


வெள்ளிக்கிழமையிலே கொள்ளிக்கண் மாரியரே


வெள்ளியிலுந் திங்களிலும் வேண்டியபேர் பூஜைசெய்ய


பூஜை முகத்திற்குப் போனேனென்று சொல்லாதே


இந்த மனையிடத்தில் ஈஸ்வரியே வந்தருள்வாய்


வந்தமனை வாழுமம்மா இருந்தமனை ஈடேறும்


இருந்தமனை ஈடேற ஈஸ்வரியே வந்தருள்வாய்


கண்பாரும் கண்பாரும் கனகவல்லித் தாயாரே [300]]


[அருள் இன்னமும் பொழியும்!]

No comments:

Post a Comment