Tuesday, October 5, 2010

உயிரினில் இனிப்பவள்!



நினைவினில் நின்றவளே - நிலவின்
கலைதனைக் கொண்டவளே
மலையென நின்றவனை - குலையா
காதலால் வென்றவளே

கருத்தினில் உறைபவளே - குறைகளை
பொறுத்தருள் புரிபவளே
கருத்திட்ட கண்டனுக்கு - ஒருபுறம்
கொடுத்திட்ட உமையவளே

விதியினை அறுப்பவளே - எனக்கு
கதியென இருப்பவளே
ஸ்ருதியுடன் லயமெனவே - எந்தன்
உயிரினில் இனிப்பவளே!

--கவிநயா

No comments:

Post a Comment