Friday, August 2, 2013

அம்மன்துதி பாடிடுவோம் .


அம்மன்துதி பாடிடுவோம்  .

தெம்மாங்குத் தேனிசையில் 
அம்மன் துதி பாடிடுவோம் .
சிம்மவாகினி வருவாள்
 நம்மநலம் காத்தருள்வாள் .

ஆத்தாளாம்  அபிராமி 
பார்த்தாலே போதுமடி!
பூத்திடுமே புதுவாழ்வு !
தோத்தோடும் தரித்திரமே !

தெம்மாங்குத் தேனிசையில் 
அம்மன் துதி பாடிடுவோம் .
சிம்மவாகினி வருவாள்
 நம்மநலம் காத்தருள்வாள் .
 


நாத்திகரை ஆத்திகராய் 
மாத்திடுவாள் மகமாயி !
காத்திடுவாள் , நம்மைக்கரை 
சேர்த்திடுவாள்  காத்தாயி !

தெம்மாங்குத் தேனிசையில் 
அம்மன் துதி பாடிடுவோம் .
சிம்மவாகினி வருவாள்
 நம்மநலம் காத்தருள்வாள் .

7 comments:

  1. அன்பு மகள் கவிநயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. இது உங்கள் அன்பு மகளின் பிறந்தநாளையிட்டு எழுதிய பாடலா ?..
    அருமையாக உள்ளது .நாங்களும் உங்கள் செல்ல மகளை
    நீடுழி வாழ வாழ்த்துகின்றோம் .மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

    ReplyDelete
  4. லலிதாம்மா, with your permission, lemme extend your song a bit!

    தெம்மாங்குத் தேனிசையில்
    அம்மன் துதி பாடிடுவாள்
    செம்மாங்குத் தமிழ்க் கவிஞர்
    கவிநயா என்று ஒருவள்!

    அவளுக்கு உலகன்னை
    தலை வாரிப் பூச்சூட்டி
    அமுதிட்டு அருளிட்டு
    அரவணைப்பாள் இந்நாளில்!

    அன்னாள் பிறந்தநாள் அன்னையின் சிறந்தநாள்
    அந்நாள் இந்நாளென்(று) உணர்!
    ------

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்-க்கா!:)
    from ravi & ragavan

    ReplyDelete
  5. அழகான வரிகள் !

    நன்றி லலிதா அம்மா.

    ReplyDelete
  6. அம்மாவை அழகு தமிழில் பாடும் செல்லக்குழந்தை கவிநயா அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  7. ஆஹா, பார்த்ததும் இனித்தது. மிக்க நன்றி லலிதாம்மா. கூடவே அழகாகப் பாடி வாழ்த்தியதற்கு மிக்க நன்றி கண்ணா. தனபாலன், அம்பாளடியாள், ஷைலன், அனைவரின் அன்பிற்கும் நன்றிகள் பலப் பல.

    ReplyDelete