Monday, November 18, 2013

பொன்னார் மேனியன் சிவனின் உமையே! - 3


சுப்பு தாத்தா அடானாவில் அருமையாகப் பாடியதைக் கேட்டு மகிழுங்கள்! மிக்க நன்றி தாத்தா!

 
மலமொரு மூன்றினைக் களைவாய் வனிதே
தலமென உளந்தனில் உறைவாய் இனிதே
கலமெனைக் கருணையால் நிறைப்பாய் கனிந்தே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (9)

காமம் அனைத்தும் களைவாய் கனியே
மோகம் அனைத்தும் முறிப்பாய் முனையே*
வேகம் வந்தெமைக் காப்பாய் இமையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (10)

முகத்தினில் குறுநகை தரித்திடும் எழிலே
அகத்தினில் மலரென மணத்திடும் அழகே
இகபர சுகமெனக் கொண்டேன் உனையே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (11)

முதலும் முடிவும் நடுவும் நீயே
நலமும் திறமும் சுகமும் நீயே
உயிரும் உறவும் உடலும் நீயே
பொன்னார் மேனியன் சிவனின் உமையே! (12)




*முனையே == முன்னையே - கவிச் சுவைக்காக மருவியது.


--கவிநயா

(தொடரும்)
 

4 comments:

  1. Replies
    1. வாங்க தனபாலன். நலமா? நீங்க இல்லாம, அம்மன் பாட்டு படிக்க யாருமே இல்லை... :( வருகைக்கு நன்றி!

      Delete
  2. உனைப்பணியாவுடல் எனக்கொரு சுமையே .
    உனை இணையா உயிர்க்குடலொரு சிறையே.
    மனகனிந்தென்னை அழைத்துக்கொள் சிவையே !
    பொன்னார் மேனியன் சிவனின் உமையே !

    .

    ReplyDelete
    Replies
    1. வாங்க லலிதாம்மா. ரொம்ப நாளாச்சு பார்த்து.

      Delete