Monday, August 18, 2014

ஆடாத மனமெல்லாம்...

சுப்பு தாத்தாவின் குரலில், இசையில்,... மிக்க நன்றி தாத்தா!



ஆடாத மனமெல்லாம் ஆடிடுமே!
பாடாத கவியெல்லாம் பாடிடுமே!
(ஆடாத)

ஆடிய பாதனின், அம்பலத்தரசனின்,
அருமை மனைவியை நினைந்து விட்டால்…
(ஆடாத)

கூடாதவை கண்டு குழைகின்ற மனதினை
கொஞ்சம் அவள் புறம் திருப்பி விட்டால்…
நஞ்சுண்ட கண்டனின் கொஞ்சுமெழில் மனைவியை
நெஞ்சமெல்லாம் அள்ளி நிறைத்து விட்டால்…
(ஆடாத)

--கவிநயா



No comments:

Post a Comment