Monday, December 1, 2014

மரகத மீனாட்சி!


சுப்பு தாத்தா மென்மையான லாலி மெட்டில் இனிமையாகப்  பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!



மாமதுரை ஆளும் மரகத மீனாட்சி!
மனதினில் வந்தமர்ந்து தந்திடு திருக்காட்சி!
(மாமதுரை)

கொடியென ஒசிந்து நிற்கும் கோலஎழில் வடிவே!
விழி யசைவில் உலகைக் காத்திடும் அருட்கடலே!
(மாமதுரை)

போருக்கு வந்தவனின் ஆரமுதாகி விட்டாய்;
ஒருதிருப் பார்வையினால் அவனுள்ளம் கொண்டு விட்டாய்!
நேசத்துக்குரியவளே, நெஞ்சத்தில் அமர்ந்து விட்டாய்;
நிதமுன்னைத் துதிப்பவர்க்கு நித்திலமே அருள்புரிவாய்!
(மாமதுரை)

--கவிநயா

No comments:

Post a Comment