Monday, November 24, 2014

உனக்குத் தெரியாதா?



சுப்பு தாத்தா தன்யாஸி ராகத்தில் தண்மையாகப் பாடியிருப்பது இங்கே... மிக்க நன்றி தாத்தா!


உள்ளத்தில் உள்ளவளே

உள்ளைத்தை அறியாயோ?

கள்ளம் விட்டு வந்து உந்தன்

பிள்ளைக் கருள் புரியாயோ?



கருணை மழை என் மேலும்

கொஞ்சம் நீயும் தூவாயோ?

காத்திருந்த கண்ணுக்காக

பூத்து வர மாட்டாயோ?



காலத்தைக் கடந்தவளே

உன்காலைப் பிடித்து விட்டேன்

காலன் வரும் முன்னே என்னைக்

கரைசேர்க்க வாராயோ?



வேலனுக்கு வேல் தந்தாய்

கணபதிக்கு உயிர் தந்தாய்

பிள்ளைக்கென்ன வேண்டுமென்று

அன்னை உனக்குத் தெரியாதோ?


--கவிநயா

No comments:

Post a Comment