Monday, February 1, 2016

இன்வழி சொல்லாயோ ?

வழி எல்லாம் நின்னருள்
வழிகின்ற வேளையில் - என்
விழிகளைத் திறவாது றங்குமெனது
வினைகளைக் களையாயோ - பழ
வினைகளைக் களையாயோ ?
மகா மேரு. (நன்றி: கூகிள் )

பந்தகளூடே அந்தகனாய் நான்
கந்தலும் காந்தமாய் கவர்ந்தென்னை அழுத்திட
உந்தன் ஒளி உணரா துறந்குமெனது
அந்தத்தினை அருள்வாயோ ? என்னை
அக்கரை சேர்ப்பாயோ ?

அனந்தம் நீ என அறிந்தோர் சொல்லுவர்.
ஆனந்தம் நீ என தெளிந்தோர் சொல்லுவர்.
இனம்புரியா என் இன்னல்கள்  களைய
இன்றே வருவாயோ ? இறைவி ! எனக்கோர் 
இன்வழி சொல்லாயோ ?

No comments:

Post a Comment